Saturday, July 15, 2006

நான் நிறையக் கேள்வி கேட்பேங்க.

கைபர் போலன் கணவாய் பற்றி மலேசியா, சிங்கப்பூர் அமெரிக்கா வில் இருந்து பேசிக் கொண்டிருக்கும் மாமேதைகள்,அந்த ஊர்களில் உள்ள மண்ணின் மைந்தர்கள், உங்கள் சந்ததியினரை (ஏன் உங்களைக் கூட) இந்தியாவில் இருந்து வந்தவன் என்று சொன்னால்,

சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து வங்கக் கடல் வழியே நீந்தியே தமிழ் நாட்டிற்கு வந்து விடுவார்களா? இல்லை கப்பல் விமானம் இது போல ஏதாவது வேண்டுமா?

அமெரிக்காவில் இருந்து அட்லாண்டிக் கடலை உள் நீச்சல் அடித்தே கடந்து மத்திய தரைக்கடலில் வெளியே தலையை நீட்டிக் காத்து வாங்கி விட்டு சேது சமுத்திரக் கால்வாய் மூலம் சென்னையை அடிவார்களா?
இல்லை பசிபிக்கடல் எங்களுக்குப் பஞ்சு மெத்தை என வீரவசனம் பேசுவார்களா?

5 Comments:

Blogger ஜயராமன் said...

அட என்ன சார்,

தமிழ்நாடுதான் சார் ஒரிஜினல். மத்ததெல்லாம் இங்கிருந்து பரவியதுதாங்க. திராவிடன்தான் நேரிடையாக குரங்கிலிருந்து வந்தோம். மத்தவனெல்லாம் நம்ப டூப்ளிகேட்டுங்க. அதுனால, மலேசியா, அமெரிக்கால்லாம் ஒரிஜினல் திராவிட நாடுதான். இந்த புஷ் எல்லாரும்தான் வந்தேறிகள். நாம இல்ல.

என்னமோ சொம்மா.. பேசிகிட்டு...

10:22 AM  
Blogger VSK said...

தென்னாட்டில், ஏன் இந்தியாவில் இருக்கும், பழங்குடி மற்றும் தலித்துகள்[இதற்கு ஒரு தமிழ்ச் சொல் கிடையாதா?"தாழ்த்தப்பட்டவர்" எனும் சொல் எனக்கு சமாதனமில்லை!] அத்தனை இனங்களுமே ஆரிய திராவிடக் கலப்பே!

அதனால்தான் வரிந்து கட்டிக்கொன்டு, மேலே சொன்ன இரு மக்களையும் அழுத்தி வைத்தனர், மற்ற அனைவரும்.

எனவே, குறிப்பிட்ட ஒரு சாதியை இகழ்வதின் மூலம், 'ஆரிய வந்தேறிகள்' எனத் தனித்துக் காட்ட முயற்சிப்பதன் மூலம், மற்றவர்கள் செய்வதெல்லாம், ஒரு தப்பித்தலே![Escapism]

'இவன் தான் இதையெல்லாம் செய்தான், செய்கிறான். நானில்லை" என பயந்து ஓடும் ஒரு கபட வேடமே!

பாப்பாரப்பட்டி, கீரிப்பாளையம் என பல மேற்கோள்களை இதற்குக் காட்ட முடியும்.

நாம் அனைவரும் இதனை ஒப்புக்கொண்டு, குற்றம் சாட்டுதலை விட்டு, பழி துடைக்க முனைந்தால்,
'மனத்தளவில் மாசற்றவனாக'
வாழ முயற்சித்தால், உய்வதற்கு வழியுண்டு.

இதனைத்தான் எனது 'தேன்கூடு போட்டி' பதிவில் சொல்லியிருக்கிறேன்.
http://aaththigam.blogspot.com/2006/07/blog-post_09.html

திரு. மா. சிவக்குமாரும், யாரும் வரவில்லையெனினும், 'கடை விரித்தும் கொள்வாரில்லை' எனினும் சொல்லி வருகிறார்.
http://masivakumar.blogspot.com/

நண்பர்களே,
'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை'
'தன் முதுகு எப்போதும் தனக்கேதான் தெரியாது'

எனவே,
'ஓஹோஹோஹோ மனிதர்களே!உண்மையை வாங்கி, பொய்களை விற்று, உருப்பட வாருங்கள்.'
நன்றி!

1:28 PM  
Anonymous Anonymous said...

miga nalla sindhanai.
makkal thirudhanume?
makkal thirundhuvaargal!!!
Maakal?
jaddhi veri piditha maakkal?

3:18 PM  
Blogger மாயவரத்தான் said...

இதில் பெரிய தமாஷ் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவு 'தீவிர' பதிவர்களை எந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம் என்றே கூற முடியாது. அவர்களும் 'வந்தேறிகள்' என்று கூறிக் கொண்டு எழுதி பிதறுவது தான்.

பிராமணர்களுக்கு என்று தனி பேச்சுத் தமிழ் இருக்கிறது என்று காலத்துக்கும் நமத்துப் போன ஒரு குற்றச்சாட்டை (?!) வைத்துக் கொண்டிருக்கும் ஜந்துக்கள், மேற்படி பிரிவு மக்கள் தனி பெயர், பேச்சு, பழக்க வழக்கம் என்றெல்லாம் வைத்திருப்பதை கண்டு கொள்ளாமல் விடுவது 'அடி'க்கு பயந்து தான். என்ன நான் சொல்றது?!

3:59 PM  
Blogger ராபின் ஹூட் said...

நான் கேட்ட கேள்விக்குத் தப்பா பதில் சொன்னாலும், பதில் சொன்னவுங்களுக்கு நன்றி.

5:39 AM  

Post a Comment

<< Home