Wednesday, August 09, 2006

சோழ நாட்டு வந்தேறி

எங்களோட சொந்த ஊர் தஞ்சாவூர். நான் சென்னையில் கடந்த 35 வருடங்களாக் குடியிருக்கிறேன்.

அப்ப நான் சோழ நாட்டில் இருந்து பல்லவ நாட்டிற்கு வந்த வந்தேறியா?

முதல்ல நான் இருந்தது வண்ணாரப் பேட்டை. இப்ப இருக்கிறது ராயபுரம்.
அப்ப நான் வண்ணாரப் பேட்டை வந்தேறியா?

நாங்க முதன் முதலில் குடியிருந்த தெரு ராமசாமி நாயக்கர் தெரு.
இப்ப இருகிறது சின்னச்சாமி செட்டி தெரு.

அப்ப நான் "ராமசாமி நாயக்கர் தெரு" வந்தேறியா?

வீட்டு நம்பர் சொல்லனுமா? ராயபுரம் ஆளுன்னு தெரிஞ்ச பின்னாலுமா?

முதலில் என் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கப்பா !!

Friday, August 04, 2006

ராபினுக்கு ஓய்வு....

கொஞ்சம் நாட்கள் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டு ஓய்வெடுக்கப் போகிறான் ராபின்.

இந்தியாவில் இருந்து கொண்டு யார் யாரையோ ஏமாற்ற அமெரிக்க நேரப்படி பதிவு போடுவது, ஜப்பான் நேரப்படி பின்னூட்டம் ரிலீஸ் எல்லாம் முடியல சாமிகளா!!!. சரியான தூக்கம் இல்லாததுனாலே நேற்று ஆபிசுல தலை சுத்திக் கீழே விழுந்துட்டேன். ஏற்கனவே ஹை B.P வேற.

டாக்டர் உடம்பை நல்லாப் பார்த்துக்கச் சொல்லியிருக்கார். உடம்பைத் தேற்ற வாரம் இரு முறை ஆட்டு நெஞ்செலும்பு சூப் உப்பில்லாம குடிக்கச் சொல்லியிருக்கார்.

அதனால மூர்த்தியண்ணே கொஞ்ச நாள் என் தொந்தரவு இல்லாம Enjoy......