Tuesday, October 17, 2006

அட்டகாசமான தீபாவளி

தீபாவளி என்பது நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ணர் கொன்று உலகத்தை தீமைகளில் இருந்து காப்பாற்றியதை நினைவு கொள்ளும் வகையில் கொண்டாடுகிறோம் என்று சொல்லப்படுகிறது.இந்த ஆண்டு தீபாவளியை நான் இப்போதே நான்கு நாட்கள் இருக்கும் போதே கொண்டாட ஆரம்பித்து விட்டேன். இனி சரவெடிதான்.

போலி டோண்டு மூர்த்தி என்ற நரகாசுரனை அழிக்க ராபின் வில்லையும் அம்பையும் தூக்கி சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது. அவனைப் பின் தொடர ஆரம்பித்து வலுவான பல ஆதாரங்களைச் சேகரித்து ஆளையும் நான் சுட்டிக்காட்டி விட்டேன். சில ஆதாரங்களை என்னால் பொதுவில் வெளியிட முடியாது. வெளியிட்டால் அவன் அதனை அழிக்க முற்படலாம்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, நான் என் நண்பன் துணையோடு(நண்பரால் தயாரிக்கப்பட்ட) சில ஸ்பை சாப்ட்வேர்களை தந்திரமாக மூர்த்தியின் கணிணிக்குள்(சந்தேகப்பட்ட சில ஐ.பி முகவரிகளுக்கு மட்டும்) இறக்கினோம். அவைகள் நான்கு நாட்கள் மூர்த்தியின் கணிணியில் இறங்கி வேலை செய்தது. அதன் மூலம் இண்டர்நெட் வழியாக பல முக்கிய ஆவணங்கள் மூர்த்தியின் கணிணியில் இருந்து பெறப்பட்டன. கணிணியில் இருந்து மூர்த்தியின் இந்திய முகவரி தொலைபேசி எண்கள் மற்றும் பல புகைப்படங்கள் போலி டோண்டு மூர்த்திதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன.

மூர்த்தியின் முகவரியை வெளியிடுவதற்கு முன்பு அவனுக்கு மீண்டும் ஒரு சந்தர்பம் வழங்குகிறேன். அவன் அனைத்து ஆபாச தளங்களையும் அழிக்க வேண்டும். அவன் டோண்டுவுடன் சண்டை போடட்டும் போடாமல் இருக்கட்டும் அது அவர்களின் தனிப்பட்ட விசயம். ஆனால் மற்றவர்கள் டோண்டுவிற்கு பின்னூட்டம் போட்டால் ஆபாசமகப் பின்னூட்டம் இடுவதையும் விட்டு விட வேண்டும். நான் நிறைய சந்தர்பங்கள் வழங்கியிருக்கிறேன். இது கடைசி சந்தர்பம்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்.
1. முகவரியை வெளியிடுவது,
2. மூர்த்தியின் குடும்பத்தினருக்குத் தொலைபேசி மூலம் அவனின் உண்மையான முகத்தை அவன் உறவினர்களுக்கு சொல்வது,
3.அவனின் ஆபாசத்தளங்களின் பிரிண்ட் அவுட்களை குடும்பத்தினருக்கு அனுப்பிவைப்பது.
அவ்வாறே தமிழ்மண வாசகர்களையும் செய்யுமாறு கேட்டுக் கொள்வது,
4.பிட் நோட்டீஸ் அச்சடித்து அரக்கோணம் மற்றும் மன்னார்குடி பகுதிகளில் வெளியிடுவது.

இதற்கு என்னுடைய மொத்த பட்ஜெட் ரூபாய் 6000.